துன்பத்தில் நியாயம் நேர்மை என புலம்பும் மனிதா...!
வசதியாய் வாய்ப்புகள் அமையும்பொழுது
அவைகளை வசதியாய் மறந்துவிடுவது ஏனோ..!
ஏழ்மையில் சமுதாயத்தை சாடும் நீ...!
பணம் வந்ததும் ஏழ்மை சமுதாயம்
உனக்கு ஏளனமாய் தெரிவதுதான் ஏனோ..!
நீ இனம் மாறும் மாயைதான் என்னவோ..!
பதவிகளை பற்றி பாடங்கள் நடத்தும் நீ...!
பதவி வந்ததும் பாடங்களை மறந்து
புகழை நோக்கி ஓடும் மயக்கம்தான் ஏனோ..!
பதவிகள் பெற நீ படும்பாடுகள் என்ன..?
புகழைப் பெற நீ செய்யும் வேலைகள்தான் என்னென்ன..?
குழி பறிக்கும் தந்திரங்கள்தான் என்னென்ன...?
ஓ மனிதா...!!! சிறந்த மனிதர்களால் மட்டுமே பதவிகள் சிறக்கின்றனவே தவிர
பதவிகளால் ஒருவன் சிறந்த மனிதனாயிவிடுவதில்லை..
தவறுகளை பற்றி தவறு செய்பவர்களே சுட்டிக் காட்டும் வினோதங்கள் என்ன..?
மரியாதையை பற்றி மரியாதை தெரியாதவர்கள் பேசும் மாயங்கள் என்ன..?
உலகின் தவறுகளை ஒரு விரலால் சுட்டிக் காட்டும் மனிதா..!
அடக்கமாய் உனது தவறுகளை சுட்டிக் காட்டும் மற்ற விரல்களுக்கு பதிலென்ன மனிதா..!
மனசாட்சிகள் மயானங்களில் புதைக்கப் பட்டதோ..?
இல்லை மனசாட்சிகள் மலங்களாய் வெளியேறிப் போனதோ..?
மனிதா நீ எப்பொழுது மனிதனாய் வாழ்வாய்....!!!
No comments:
Post a Comment